(க.கிஷாந்தன்)
வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை – வெலிமடை பிரதான வீதியின் வெலிமடை வேல்லேவெல பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 03 பேர் காயமடைந்துள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து 03.12.2017 அன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹியாங்கனையிலிருந்து வெலிமடையில் நிகழ்வு ஒன்றுக்கு பயணிகளை ஏற்றிச் சென்று இறக்கி விட்டு மீண்டும் வெலிமடையிலிருந்து மஹியாங்கனை நோக்கிப் பயணித்த போது வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
விபத்தில் பஸ் சாரதி உட்பட 03 பேர் காயமடைந்த நிலையில், வெலிமடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment
Post a Comment