அம்பாரையில், தடைசெய்யப்பட்ட Tramadol வில்லைகளுடன் ஓருவர் கைது



(புலனாய்வுச் செய்த-ியாளர்- ACHEALA)
சுமார் 23 000 Tramadol வில்லைகளை தன் உடமையில், வைத்திருந்த ஒருவரை, அம்பாரையில் வைத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கண்டியிலிருந்து அம்பாரை நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ்ஸில் ஒரு பொதி வந்துள்ளது. அப் பொதியினை, பெறுவதற்கு குறித்த ஒரு நபர், பல தடவைகள் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டுள்ளார். பின்பு, அதனைப் பெற்று தனது உடமையில் வைத்து,தமது காருக்குள் ஏற்ற முற்பட்ட  சமயத்தில், பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேகபர், அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என்றும், அவர் இன்று அம்பாரை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும், எமது விசேட செய்தியாளர், தெரிவித்துள்ளார்.