2018ல் அரச கடமைகளின் உறுதி மொழி ஏற்றல்



#Riswaan.
ஆண்டு 2018ஆம் ஜனவரி மாதம் கடமைகளைத் தொடங்கும் முதல் நாளான இன்றைய தினம் (2018.01.02), இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் இந் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக மாற்றியமைக்கும் புதியதோர் ஆண்டின் ஆரம்பத்தில் காலடிவைக்கும் இத்தருணத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கீழ் இயங்கி வரும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தில் அலுவலக உத்தியோகத்தர்களினால் அரசாங்க சேவை சத்தியப் பிரமாணம் செய்யப்பட்டு கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன. 
இந்நிகழ்வானது அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் J.N.கரீம் மற்றும் பொறியியலாளர்கள், உத்தியோகத்தர்கள், ஆகியோரின் பங்களிப்புடன் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.