கின்னஸ் சாதனை,4 வயதில். ஜனாதிபதி பாராட்டு



நூலொன்றை எழுதி உலகில் இளம் எழுத்தாளராக கின்னஸ் சாதனை படைத்துள்ள சிறுவனான தனுவக்க சேரசிங்க நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியைச் சந்தித்தார்.

தனது பெற்றோருடன் சீஷெல்ஸில் வசித்துவரும் இந்த சிறுவன்  '' Junk Food''  என்ற ஆங்கில நுலை எழுதும் போது அவருக்கு வயது நான்கு வருடங்களும் 356 நாட்களும் ஆகும் இந்நூலை அவர் 3 நாள் காலப்பகுதியில் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவனின் திறமையை பாராட்டிய ஜனாதிபதிபரிசொன்றை வழங்கியதுடன் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக தனது ஆசீர்வாதங்களையும் வழங்கினார்.