மின்சார வேலியை உடைத்து வீதிக்கு வந்த யானை




புத்தளம்- செல்லங்கந்தல் காட்டிலுள்ள யானையொன்று இன்று காலை  (14) புத்தளம் –அநுராதபுரம் வீதியின் 4ஆம் இலக்க மைல்கல்லுக்கு அருகில் உள்ள மின்சார வேலியை உடைத்துக்கொண்டு வீதிக்கு வந்துள்ளது.
குறித்த யானைகள் தமது தந்தங்களைப் பயன்படுத்தி மின்சார வேலிகளை உடைப்பதாக புத்தளம் வனஜீராசிகள் உதவி பணிப்பாளர் டபிள்யு. கே.எம்.எஸ். சந்தரரத்ன தெரிவித்தார்.
காட்டை விட்டு வெளியே வந்துள்ள யானையை காட்டுக்குள் துரத்துவதற்காக வனஜீவராசிகள் அதிகாரிகள் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.