வான் கதவுகள் திறக்கப்படும் நிலை




ரன்தம்பே நீர் தேக்கத்தின் வான் கதவுகளை திறக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. 

தற்போது ஏற்பட்டுள்ள அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு மணித்தியாலங்களில் இந்த வான் கதவுகளை திறக்கும் நிலை ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக அந்த நிலையம் கூறியுள்ளது. 

இதன் காரணமாக அதனை அண்டிய தாழ்வான பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.