பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை




நீதிமன்ற சட்டதிட்டங்கள் மற்றும் தேர்தல் சட்டதிட்டங்களை மீறி கடந்த 25ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நுகேகொடை நீதவான் நீதிமன்றிட்கு அறிக்கையை சமர்ப்பித்து சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கும், குறித்த ஆர்ப்பாட்டம்  தொடர்பில் வெவ்வேறு ஊடகங்களில் வெளியிடப்பட்ட ​காணொளிகளைப் பெற்றுக்கொள்வதுக்கும் நீதிமன்ற நீதவானின் அனுமதியைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த காணொளிகளைப் பெற்று அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்து பிரதான சந்தேகநபர்களை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.