சர்வதேச உதவியை வேண்டி நிற்கும் சிரியா அகதிகள்.



தகவல்  := أم يوسف

நான் உம்மு யூஸுப் . நாங்கள் வடக்கு ஹல்ப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்தோம். சிரியாவின் கொடுகோலன் பஷாரின் கூட்டுப்படை நடத்தி வருகின்ற கண்மூடித்தனமான தாக்குதலால் நாங்கள் எங்களது சொந்த இடங்ககைவிட்டு 100 km தொலைவில் உள்ள அடிப்படை வசதிகள் குறைந்த பிரதேசங்களில் அகதிகளாக குடியமர்ந்துள்ளோம்.

எனது கிராமத்தில் மாத்திரம் நாங்க சுமாராக 6000 பேரளவில் புலம்பெயர்ந்து வந்துள்ளோம். எல்லாப் பகுதிகளிலும் இருந்து சுமாராக ஒரு இலட்சத்து பதினாலாயிரத்திற்கும் அதிகமானோர் ( 114000 ) தற்போது அங்கு புலம்பெயர்ந்து வந்துள்ளார்கள். 

 அங்கு கூடாரங்கள் குறைவாக உள்ளது.  நாங்கள் கூடாரங்களிலும் வண்டில்களிலும் தற்காலிகமாக இரவு பகல் நேரத்தை கழித்து வருகின்றோம்.  சாதாரணமாக ஒரு கூடாரத்தில் 3 / 4 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.  கவலை என்னவென்றால் எங்களுடைய பிள்ளைகளுடன்வது  எங்களுக்கு சேர்ந்துவாழ முடியாது உள்ளது.  நாங்கள் ஒரு கூடாரத்திலும் எங்களது பிள்ளைகளை வேறு கூடாரத்தினுள்ளும் வாழ்ந்து வருஙின்றோம்.

 இங்கு நிறுவனங்களின் உதவிகள் போதாது உள்ளது.  இன்னும் இரண்டு இலட்சம் கூடாரங்கள் தேவைப் படுகின்றது. இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு போதிய போஷாக்கு கிடைப்பதில்லை.  இவ்வாறு நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். முடிந்தால் எங்களுக்கு உதவுங்கள். 

 கட்டுரை
அஷ்ஷெய்க் ஹபீஸுல்ஹக் ( பாதிஹி )