கல்முனை தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்



கல்முனை தனியார் பஸ் ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் பஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதுடன்
இன்று காலை 5 மணிமுதல் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இணைந்த பஸ் சேவையை வலியுறுத்தியும், நிரந்தர தரிப்பிடம் கோரியும் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் அக்கரைப்பற்றுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்களே இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடததக்கது.