ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மூடப்பட்டது




ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். 

சின்னம்மை நோய் பரவல் காரணமாகவே பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் மறு அறிவித்தல் வரும் வரை மூட தீர்மானித்ததாகவும் துணை வேந்தர் தெரிவித்துள்ளார். 

நேற்று (12) வரை பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த 27 மாணவர்கள் சின்னம்மை நோயினால் பீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.