பேருந்திலிருந்து விழுந்து ஒருவர் பலி






சிலாபம் - இனிகொடவெல பகுதியில் பேருந்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று (11) அதிகாலை 2.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உஸ்வெடகெய்யாவ பிரதேசத்தினை சேர்ந்த 54 வயதுடைய பெசில் பெட்ரிக் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

பேருந்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் அவரின் நிலமை கவலைக்கிடமாக இருந்ததால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் பேருந்தின் ஓட்டுனரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.