கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (10) காலை விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
கண்டியின் சில பகுதிகளுக்கு விஜயம் செய்த பிரதமர் உள்ளிட்ட குழுவினர், தாக்குதல் நடத்தப்பட்ட மற்றும் சேதங்களுக்கு உள்ளாகிய வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள், வீடுகளுக்கும் சென்று பார்வையிட்டனர்.
கள நிலவரங்களை விசாரித்த பிரதமர் ரணில், மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டார்.
(மலையக நிருபர் கிரிஷாந்தன்)
பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
கண்டியின் சில பகுதிகளுக்கு விஜயம் செய்த பிரதமர் உள்ளிட்ட குழுவினர், தாக்குதல் நடத்தப்பட்ட மற்றும் சேதங்களுக்கு உள்ளாகிய வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள், வீடுகளுக்கும் சென்று பார்வையிட்டனர்.
கள நிலவரங்களை விசாரித்த பிரதமர் ரணில், மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டார்.
(மலையக நிருபர் கிரிஷாந்தன்)


Post a Comment
Post a Comment