இடமாற்றம்



தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் மூவர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கும் சேவையிவ் அவசியம் கருதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படிதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

அதன்படி ஹெட்டிபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பணியாற்றிய தலைமை பொலிஸ் பரிசோதகர் எஸ். என்.டி சொய்சா நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவும், நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பணியாற்றிய தலைமை பொலிஸ் பரிசோதகர் ஆர்.டீ.ஏ. ராஜபக்ஷ ஹெட்டிபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் புளத்சிங்கள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பணியாற்றிய தலைமை பொலிஸ் பரிசோதகர் எச்.ஏ. பிரேமலால் கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவும், கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் எல்.என்.பீ மஹகெதர வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.