சவுதியில் இலங்கைப் பெண் சுட்டுக் கொலை



சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

கடந்த சனிக்கிழமை காலை சவுதி அரேபியாவின் புரைதா என்ற பிரதேசத்தில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக, அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

42 வயதான இலங்கைப் பெண் ஒருவரே சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சவுதி பிரஜை ஒருவரே இந்தக் கொலையை புரிந்துள்ளார். 

பின்னர் அந்த சவுதி பிரஜையும் அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்த நாட்டு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.