கல்முனை சட்டத்தரணிகள் சங்க பணிப் பகிஸ்கரிப்பு



-எம்.எஸ்.எம். ஹனீபா--
நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பாரபட்சமின்றி நிலைநாட்டப்பட வேண்டும் என, கோரிக்கை முன்வைத்து, அம்பாறை- கல்முனை சட்டத்தரணிகள் வழக்குகளில் ஆஜராகாது இன்று (09) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என,  கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.
கல்முனை மேல்நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு ஆஜராகாமல் சுமார் 40 சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் அவர் மேலும் தெரிவித்தார்.