மட்டக்களப்பு விமான நிலையம் மக்கள் பாவனைக்கு



மட்­டக்­க­ளப்பு விமான நிலையம் சிவில் விமான சேவைகள்  அதி­கார சபை­யிடம்  ஒப்­ப­டைக்­கப்­பட்­டதை அடுத்து  விமான  சேவைகள்  மற்றும் சேவை நட­வ­டிக்­கை­களை இன்று 25 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை  முதல் ஆரம்­பிக்க  விமான நிலை­யங்கள்  மற்றும் விமான சேவைகள் நிறு­வனம்  நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது.


மட்­டக்­க­ளப்பு விமான நிலையம் 1958 நவம்பர் 17 ஆம் திகதி சிவில்  விமான சேவைகள் திணைக்­க­ளத்தால்  ஆரம்­பிக்­கப்­பட்­டது. யுத்தம் கார­ண­மாக  கடந்த 25 வருட  கால­மாக இந்த விமான  நிலையம் இரா­ணுவ மற்றும் விமா­னப்­ப­டை­யி­னரின்  நட­வ­டிக்­கை­க­ளுக்­காக  மாத்­திரம்  பயன்­ப­டுத்­தப்­பட்­டது.
 நாட்டில் தற்­போது  சுமுக நிலை ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து  சுற்­று­லாத்­து­றையை அபி­வி­ருத்தி செய்யும் நோக்கில் உள்­நாட்டு வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­களின்  வச­தியை  முன்­னிட்டு மட்­டக்­க­ளப்­புக்கு  விமான சேவைகளை  நடத்த தனியார் விமான சேவைகள் நிறுவனங்கள்  முன்வந்துள்ளன.