(அப்துல்சலாம் யாசீம், )
ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் திருகோணமலை மாவட்டத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு கிழக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று (03) சேறுவில தொகுதியின் பிரதான அமைப்பாளர் நளின் குணவர்த்தன தலைமையில் நடைபெற்றது.
இதன் போது திருகோணமலை மாவட்டத்திலுள்ள மொறவெவ,சேறுவில,கோமரங்கடவெல,கந் தளாய்,
வெறுகல்,பதவிசிறிபுர மற்றும் தம்பவகாமம் போன்ற பிரதேச சபைகளுக்கு தெரிவான 21 உறுப்பினர்கள் சத்திரபிரமானம் செய்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.அஸீஸ். கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச்செயலாளர் நிமால் சோமரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment