காலி, படபொலை – சாதமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை கடத்தி சென்ற சம்பவம் தொடர்பில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் ஐந்து நபர்களால் குறித்த மாணவி கடத்தப்பட்டிருந்தார்.
மாணவி கடத்தப்பட்டதாக படபொலை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் மாணவியை மீட்டதுடன், நால்வரைக் கைது செய்தனர்.
இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாகியுள்ளார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment