"கோல்டன் பீகொக்' விருதை திருடியவர்களுக்கு விளக்கமறியல்



காலஞ்சென்ற பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ​ஜேம்ஸ் பீரிஸின் விருதை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் மே மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

அவருடைய வீட்டில் இருந்த கோல்டன் பீகொக் (Golden Peacock) என்ற விருதினை இறுதிக் கிரியையின் போது திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது.