வவுனியா விவசாய பிரதிப்பணிப்பாளருக்கு இடமாற்றம் வழங்கியமையை கண்டித்து வடமாகாண முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சருக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பொது அமைப்புக்கள் இன்று (30) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா விவசாய பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றிய யோகேஸ்வரன் பதவியேற்று இரண்டரை ஆண்டுகளுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டமையை கண்டித்து, வவுனியாவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மூங்கில் செய்கையால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாகவும் தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தினர், அமுதம் சேதன விவசாய உற்பத்தி அமைப்பு, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, இலங்கை தேசிய பொது ஊழியர் சங்கம் என்பன இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதுடன் முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சருக்கு எதிராக கோசங்களையும் எழுப்பினர்.


Post a Comment
Post a Comment