கிரிவெஹர ரஜமகா விகாரையின் துப்பாக்கிச் சூட்டு பிரதான சந்தேக நபர் கைது



கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதியின் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான அசேல லக்ஷ்மன் பண்டார, பெபிலியான பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரதான சந்தேக நபருடன் இரட்டை சகோதரர்களும் பெபிலியான பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அசேல லக்ஷ்மன் பண்டார, கதிர்காமம் மஹாசென் ஆலயத்தின் முன்னாள் கப்புராளை என்பது குறிப்பிடத்தக்கது.