விஷேட மேல் நீதிமன்றத்திற்கான நீதிபதிகள்




பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விஷேட மேல் நீதிமன்றத்திற்கு மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இந்த நீதிபதிகளை நியமித்துள்ளார். 

அதன்படி சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்ப ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் விஷேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விஷேட மேல் நீதிமன்றம் புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இயங்க உள்ளதுடன், எதிர்வரும் ஜூலை மாதம் 15ம் திகதி முதல் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விசேட நீதிமன்றத்துக்கான திருத்தச் சட்டமூலம் கடந்த 9ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை கூறத்தக்கது.