கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் தங்களை பகடிவதையிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும், அப்பல்கலைக்கழகத்தில் பகடிவதையை நிறுத்தவும் புதிய அவசரகால பாதுகாப்பு செயலி ஒன்று இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தகவல் தொடர்பு முகவர்களுடன் இணைந்து கொழும்பு பல்கலைக்கழகம் இந்த புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயலியினூடாக, பகடிவதையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அதற்கு காரணமானவர்கள் குறித்த முறைபாட்டை பதிவு செய்யலாம் என கொழும்பு பல்கலைக்கழக தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில், உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment