ஜனாதிபதியுடனான சந்திப்பை அடுத்து தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது



ஆசிரியர் தொழிற்சங்கத்தினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவிருந்த தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியுடன் இன்று (25) நடைபெற்ற கலந்துரையாடல்களை அடுத்து, தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கல்விச் சேவையில் அரசியல் பழிவாங்கும் போர்வையில் நியமனம் வழங்குவதை எதிர்த்து, தொழிற்சங்க போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டுமென கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.