யாழ்ப்பாணம் - நெலுக்குளம் புகையிரதக் கடவையில் இன்று (28) இடம்பெற்ற விபத்தில், இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும் மேலுமொருவர், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களே, இச்சம்பவத்தால் பதிக்கப்பட்டுள்ளனர். சமிக்ஞை விளக்கு போடப்பட்டிருந்தபோதும், பாதுகாப்பு வேலிகள் இல்லாத கடவையில் இளைஞர்கள் கடக்க முற்பட்டபோதே, புகையிரதம் மோதி இருவர் உயிரிழந்துள்ளார். இளைஞர்கள், தலைக்கவசம் பயன்படுத்தியிருக்கவில்லை என்றும் தெரியவருகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment