13 மில்லியன் பெறுமதியான பீ​டி இலைகள் கைப்பற்றப்பட்டன




இலங்கை சுங்கப் பிரிவினரால் நேற்றைய தினம் (20) 18 டொன் அளவிலான பீடி இலைகளின் தொ​கை கைப்பற்றப்பட்டது. இவற்றின் பெறுமதி 13 மில்லியன் ரூபாயெனத் தெரிவிக்கப்பட்டது.

சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவிக்கையில், குறித்த பீடி இலைகளின் தொகையை 2 கொள்கலன்களில் இருந்து  கைப்பற்றியதுடன், குறித்த லொறியின் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பீடி இலைகளானது, கொள்கலனில் இருந்த வெங்காய சாக்குகளில் இருந்து கைப்பற்றப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.