வங்கியில் கொள்ளை - துப்பாக்கிச்சூட்டில் ஒருவருக்கு காயம்




கந்தர, பரவாஹெர பகுதியில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் 3 இலட்சம் ரூபா கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இரண்டு மோட்டார் சைக்கிளிகளில் வருகை தந்த இனம் தெரியாத 4 பேர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று (21) பகல் 3.10 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த கொள்ளைச் சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வங்கிக்கு வருகை தந்திருந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

காயமடைந்த பெண் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.