மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் காலமானார்



மூத்த பத்திரிக்கையாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான குல்தீப் நய்யார் நேற்றிரவு டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 95.
பன்முக திறமையாளராக அறியப்பட்ட குல்தீப், பஞ்சாப் அருகேயுள்ள சியால்கோட் பகுதியில் 1924 ஆம் ஆண்டு பிறந்தார்.
பத்திரிக்கையாளர், தூதர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் எழுத்தாளர் என தடம் பதித்து அனைத்து துறைகளிலும் சிறந்தி விளங்கியவர் குல்தீப்.
அரசியல் தலைவர்கள் பலரும் குல்தீப் நய்யார் குறித்த அஞ்சலி செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.
மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் காலமானார்
பிரதமர் நரேந்திர மோதி பதிந்துள்ள அஞ்சலி செய்தியில், "சமகாலத்தில் மிகச்சிறந்த அறிவாளி குல்தீப்" என்று கூறிய அவர், எமெர்ஜென்சிக்கு எதிரான குல்தீப்பின் நிலைப்பாட்டையும் போற்றியுள்ளார்.
பிபிசிக்காக குல்தீப் எழுதிய கட்டுரையை படிக்க:
மேற்கு வங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்படத்தின் காப்புரிமைMAMATA BANERJEE
Image captionமேற்கு வங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்
புதுடெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாபடத்தின் காப்புரிமைMANISH SISODIA
Image captionபுதுடெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா இரங்கல்
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்படத்தின் காப்புரிமைPRESIDENT OF INDIA
Image captionஇந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்
மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி இரங்கல்படத்தின் காப்புரிமைARUN JAITLEY
Image captionமத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி இரங்கல்