ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தருக்கு,விளக்க மறியலில்



கோளாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட,ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், இலஞ்ச ஊழல் ஆனணக்குழுவினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபரை அக்கரைப்பற்று கௌரவ நீதிபதி திரு.பீற்றர் போல், முன்னிலையில் இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகள், நேற்றைய தினம் ஆஜர்படுத்தி, கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான அனுமதியனையும் கோரியிருந்தனர்.

அக்கரைப்பற்று நீதிபதியினால், அதற்கான  அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.