மன்னார் மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைக்கு ஒத்துழைப்பு



மன்னார் கட்டடப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று காணாமல் போனோர் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி சாளிய பீரிஸ் தெரிவித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மனித எச்சங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உதவுவதற்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

தற்பொழுது இடம்பெற்று வரும் மனித எச்சங்கள் தொடர்பான அகழ்விற்கு தமது ஆணைக்குழு நேரடியான பங்களிப்பினை வழங்குவதுடன் அது தொடர்பான பணி விடயங்களையும் மதிப்பீடு செய்யது வருகின்றது என்றும அவர் மேலும் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் ஜெயதீபா புண்ணியமூர்த்தி, ஓய்வு பெற்ற மேஜர் ஜனரல் மொகந்தி அந்தோனி பீறிஸ், சோமசிறி லியனகே, மற்றும் கணபதிப்பிள்ளை வேந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)