போதையில் அரங்கேறிய களியாட்டம் - 12 யுவதிகள் உட்பட 36 பேர் கைது


இரத்தினபுரி, துரேகந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட 12 யுவதிகள் உட்பட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த களியாட்ட நிகழ்வின் போது பிரதேசவாசிகளுடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் இருவரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 530 மில்லிகிராம், கஞ்சா 4 கிராம் மற்றும் விஷத்தன்மையுடைய போதை மாத்திரைகள் 4 உம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

அவர்கள் இருவரைத்தவிர ஏனையவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வத்தளை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும் களுத்துறை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.