நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி தயாராகிறது




நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை இன்று இரவு தயாரிப்பதற்கான முன்னெடுப்படுகள் இடம்பெறுவதாக  ஐ.தே.கவின் கொழும்பு மாவட்ட எம்.பி எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பு புதிய நகரசபை மண்டபத்தில் இன்று (04) நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சர்வதேச ரீதியிலும் உள்நாட்டு தரப்புக்களினாலும் விடுக்கப்படும் அழுத்தங்களின் காரணமாகவே இந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.