ரிதிதென்ன பிரதான வீதியில் இரண்டு அடி உயரம்வரை வெள்ளநீர்




(எச்.எம்.எம்.பர்ஸான்)
ரிதிதென்ன பிரதான வீதியில் இரண்டு அடி உயரம்வரை வெள்ளநீர் செல்கிறது பயணிகள் அவதானம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவை செல்லும் வழியான ரிதிதென்ன பிரதான வீதியில் சில இடங்களில் இரண்டு அடிஉயரம்வரை வெள்ளநீர் பாய்ந்தோடுவதால் அவ் வீதியால் செல்லும் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
குறித்த வீதியும் அதனோடு சேர்ந்துள்ள இடமும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் வீதியை அடையாளங்கண்டு கொள்வதில் பெரிதும் சிரமாகவுள்ளது.
எனவே குறித்த இடத்தால் பயணிக்கும் சிறியரக வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.