அக்கரைப்பற்றில் அமைச்சர் றிசாத்தினால்,வாழ்வாதார உதவிகள்


அக்கரைப்பற்றில் 375 குடும்பங்களுக்கு 8 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு இன்று (31) ஞாயிற்றுக்கிழமை கட்சியின் அமைப்பாளர் நபீல் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில்,வர்த்தக நீண்டநாள் இடம்பெயர்வு மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கெளரவ. றிஷாட் பதியுத்தீன் கலந்து கொண்டார்.
கெளரவ அதிதியாக விவசாயநீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி மற்றும் துறைமுக, கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப் , பாராளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக் றகுமான் , கட்சியின் பொதுச் செயலாளர் சுபைதீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஜவாத், அமீர், NEDA தவிசாளர் சிராஷ் மீராசாகிபு மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.