புதையல் தோண்டிய 7 பேர் கைது




கல்கிரியாகம – உல்பதகம பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கல்கிரியாகம பொலிஸபர் இன்று (26) அதிகாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் கல்கரியாகம, நாச்சதுவ, தேவகூவ மற்றும் பலாகல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

கைது செய்யப்பட்டவர்கள் கெக்கிராவ நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படுகின்றனர். 

சம்பவம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.