வட மேல் மாகாணம் மற்றும் கம்பஹ பொலிஸ் பிரிவுக்கு ஊரடங்கு


வட மேல் மாகாண மற்றும் கம்பஹ பொலிஸ் பிரிவுக்கு இன்று இரவும் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வரும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

அதன்படி இன்று மாலை 07 மணிக்கு அமுலுக்கு வரும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 04 மணிக்கு நீக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.