அமித் வீரசிங்க விளக்கமறியலில்




நேற்று தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து விஷேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்ட மகசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அவரை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். 

கடந்த தினங்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.