நண்பர்களின் கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞன்


நண்பர்களுடன் நீராடிய இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் களுவாஞ்சிக்குடி பெரியகல்லாறு கடல்நாச்சி அம்மன் ஆலயத்துக்கு எதிரே உள்ள நீரோடையில் நடந்துள்ளது.
நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இந்த இளைஞன் சற்று நேரத்தில் அதிலிருந்து மீள முடியாமல் தத்தளித்து நீரில் மூழ்கினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட நேர தேடுதலின் பின்னர் நீரோடையின் சகதியில் இருந்து மீட்கப்பட்ட இளைஞன், கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்து விட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.