பங்களாதேஷ் அணிக்கு 295 ஓட்டங்கள் வெற்றியிலக்கு


இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 294 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 87 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 54 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 46 ஓட்டங்களையும், குசல் பெரேரா 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

பந்துவீச்சில் சைபுல் இஸ்லாம் 3 விக்கெட்களையும் செளமிய சர்கார் 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். 

ஓய்வு பெற்ற இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகரவை கௌரவிக்கும் முகமாக இன்றைய போட்டிக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.