மரம் முறிந்து விழுந்ததில்


(க.கிஷாந்தன்)
மஸ்கெலியா – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் லக்கம் பிரதேசத்தில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவம் 19.07.2019 அன்று மதியம் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து சுமார் 3 மணித்தியாலயத்திற்கு மேல் தடைப்பட்டிருந்தது. இந்த பிரதேசத்தில் நிலவும் கடும் காற்றுடன் கூடிய கன மழையால் இவ்வாறு மரம் முறிந்து விழுந்துள்ளது.
இந்த மரத்தினை மவுஸ்ஸாக்கலை இராணுவ முகாமின் இராணுவத்தினர், மஸ்கெலியா பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து மிக சிரமத்திற்கு மத்தியில் அகற்றியுள்ளனர்.