முக்கிய மரபணுவை இழந்ததால்தான் மனிதர்களுக்கு மாரடைப்பு


இரண்டு மில்லியன் முதல் மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் நமது முன்னோர்கள் ஒரு மரபணுவை இழந்துள்ளனர்.
அவர்களிடம் மரபணு திரிபு ஏற்பட்டு, சிஎம்ஏஹெச் என்கிற மரபணு செயலிழந்துள்ளது. இந்த மரபணு திரிபு பரிணாம சங்கிலி தொடரில் சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், மனித இனம் உருவாவது வரை கடந்து வந்துள்ளது.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சன் டியாகோ மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆய்வு, இந்த மரபணு திரிபு ஏற்பட்டதன் காரணமாகதான் மனிதர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கிறது.
உலக அளவில் பலரும் (70 வயதுக்குள் உள்ளவர்கள்) முன்னரே இறந்துவிட இதய நோய்கள் காணமாகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
இதய நோய்களால் உலக அளவில் 17.9 மில்லியன் பேர் இறக்கின்றனர். 2030ம் ஆண்டுக்குள் இவ்வாறு இறப்போரின் எண்ணிக்கை 23 மில்லியனாக மாறும் என்று கூறப்படுகிறது.
பெரும்பாலான நேரங்களில் ரத்த குழாய்களில் கொழுப்பு அடைத்துவிடுவதால் உடலின் முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் குறைந்து இதய நோய்கள் ஏற்படுகின்றன.
மனிதர்களிடம் இது பொதுவாகவே காணப்படுகிறபோது, அதிக உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை கொண்டுள்ள சிம்பன்ஸிகளிலும், திமிங்கலங்கள் மற்றும் டால்பின்களிலும் இது நடைபெறுவதற்கு எந்த சான்றும் இல்லை.
எனவே, மனிதர்களுக்கு மட்டும் மாரடைப்பு ஏற்படுவதற்கு அப்படி என்னதான் நடந்துவிட்டது?
மாரடைப்பு சித்தரிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஇதய நோய்கள் உலக அளவில் முதுமைக்கு முன்னரே இறந்துவிடுவதற்கு காரணமாகின்றன என்று ஐக்கிய நாடுகள் அவை தெரிவிக்கிறது.

மனித அடையாளம்

இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான அஜித் வார்க்கி, அவரது முந்தைய ஆய்வுகளில், இவ்வாறு ரத்த குழாய்கள் கொழுப்பால் அடைபட்டு விடுவது, மனிதர்களிம் உள்ளதே தவிர விலங்குகளிடம் இல்லை என்பதை கண்டறிந்திருக்கிறார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நடத்திய சோதனையில், சிம்பன்ஸி மற்றும் பிற பாலூட்டி விலங்குகளை பிடித்து வைத்து மனிதர்களுக்கு பொதுவாக ஏற்படும் ஆபத்துகள் இந்த விலங்குகளுக்கு ஏற்படுகிறதா என்று சோதிக்கப்பட்டது.
ஆனால், முக்கிய கண்டுபிடிப்பு எதுவும் பதிவாகவில்லை. சிம்பன்சிகளிடம் மாரடைப்பும், ரத்தக் குழாய் அடைப்பும் ஏற்படவில்லை.
இதனால், மனிதர்களைப்போல செயல்படுவதற்கு மரபணுவை மாற்றி அல்லது அறிவியல் ஆய்வுக்காக அளவற்ற கொலஸ்டிராலை வழங்கினால் மட்டுமே விலங்குகளுக்கும் இதய நோய்கள் வருகின்றன என்று ஆய்வாளர்கள் வலியுறுத்த தொடங்கினர்.
தேசிய அறிவியல் கழகப் பத்திரிகையில் வெளிவந்த இந்த ஆய்வில், மனிதரை போல சிஎம்ஏஹெச் மரபணு நீக்கப்பட்ட சோதனை எலிகளை வார்க்கியும், அவரது அணியினரும் பயன்படுத்தினர்.
இன்னொரு பிரிவு எலிகளில் இந்த மரபணு நீக்கப்படவில்லை.
இந்த இரு பிரிவு சோதனை எலிகளுக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட்டு, ஒரே மாதிரி இயங்க செய்யப்பட்டாலும், இந்த மரபணு நீக்கப்பட்ட எலிகளின் ரத்தத்தில் இரண்டு மடங்கு கொழுப்பு அதிகரித்திருந்தது.
"சிஎம்ஏஹெச் மரபணு நீக்கப்பட்ட சோதனை எலிகளிடம், அவற்றின் எடை குறையாமலேயே இதய நோய்கள் வருவதற்கான அறிகுறிகள் தோன்றியிருந்தன", என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
"இந்த தரவுகள் மனித இனம் பரிணாமத்தில் இழந்துவிட்ட சிஎம்ஏஹெச் மரபணு மனிதர்களிடத்தில் இதய நோய்கள் ஏற்படுவதற்கான நிலைமையை தோற்றுவித்தன" என்பதை சுட்டிக்காட்டுகிறது.
இரண்டு சிம்பென்ஸி குரங்குகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionமரபணு மாற்றப்பட்ட அல்லது இயல்பற்ற முறையில் உணவு ஊட்டப்பட்ட விலங்குகளில் இதய நோய்கள் தோன்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தசையோடு தொடர்புடைய ஆபத்துகள்

மனிதரிடத்தில் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்களை பல காரணிகள் ஏற்படுத்துவதாக இந்த விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உடலியக்கம் குறைவது, அதிக அளவு கொலஸ்டிரால், வயது, நீரிழிவு, உடல் பருமன், புகைப்பிடித்தல் மற்றும் தசை இறைச்சி (Red meat) பயன்பாடு ஆகியவை இதய நோய்கள் ஏற்பட காரணமாகின்றன.
இருப்பினும், முதல் முறை இதய நோய் வருபவர்களில் 15 சதவீதத்தினருக்கு இந்த காரணிகள் இருப்பதில்லை" என்கிறார் வார்க்கி. இதற்கு காரணம் மனித மரபணு திரிபு ஏற்பட்டு இருப்பதுதான் என்பது அவரது வாதம்.
காய்கறி மட்டுமே சாப்பிடும் சைவர்களுக்கு இதய நோய் ஆபத்து காரணிகள் இல்லாமல் இருக்கிற நிலையில், அவர்களுக்கும் மாரடைப்பும், பக்கவாதமும் வருவதை விளக்குவதற்கு இந்த ஆய்வு உதவலாம்" என்று அவர் தெரிவிக்கிறார்,
மரபணுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionசிஎம்ஏஹெச் மரபணுவை இழந்த பின்னர் மனிதர்களிடம் இதய நோய்கள் தோன்றியுள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
தசை இறைச்சி சாப்பிடுகிறவர்களுக்கு அதிக ஆபத்து காணப்படுவதால், இந்த ஆய்வின் முடிவுகள் சுவையற்றதாக அமையலாம்.
தசை இறைச்சியை நாம் சாப்பிடுகிறபோது சிஎம்ஏஹெச் மரபணு என்இயு5ஜிசி (Neu5Gc) என்று அழைக்கப்படும் சியாலிக் அமிலம் போன்ற ஒன்றை சுரக்கிறது.
நமது முன்னோரிடத்தில் சிஎம்ஏஹெச் மரபணு செயலிழந்த பின்னர், என்இயு5ஜிசி குறைபாடு ஏற்பட்டு, இந்த பொருட்களை வெளிபுறத்தில் இருந்து வருபவை போல நமது உடல் பார்க்க தொடங்கிற்று.
தசை இறைச்சியில் இருக்கின்ற அதிக அளவு என்இயு5ஜிசி-யை நாம் சாப்பிடுகிறபோது, நமது உடலிலுள்ள ஆன்டிபாடிகளிடம் இருந்து நோய் எதிர்ப்புக்கான எதிர்வினை தூண்டப்படுகிறது, இதனால், தீவிர வீக்கங்கள் ஏற்படலாம்.
தற்போதைய மற்றும் முந்தைய கண்காணிப்புகளின்படி, இந்த வீக்கத்தை புற்றுநோய் மற்றும் இதய நோய்களை ஏற்படுத்துவதற்கு அதிக ஆபத்து உள்ளதோடு விஞ்ஞானிகள் இணைத்துள்ளனர்.
இந்த ஆய்வின்போது, அதிக என்இயு5ஜிசி உணவு வழங்கப்பட்ட சோதனை எலி 2.4 மடங்கு அதிக இதய நோய்களால் துன்புற்றது.
தசை இறைச்சிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionதசை இறைச்சி மற்றும் புற்றுநோய்க்கு இடையிலுள்ள தொடர்பை இந்த ஆய்வு சுட்டுகிறது.

புதிய தொடர்புகளை ஆராய்தல்

இத்தகைய நோய் எதிர்ப்புக்கு எதிர்வினை அதிக தசை இறைச்சி சாப்பிடுவதற்கும், சில வகை புற்றுநோய்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்கலாம். ஆனால், இது பற்றி மேலதிகமாக ஆய்வு நடத்த வேண்டியுள்ளது.
என்இயு5ஜிசி ஒருங்கிணைந்து இருந்த சிஎம்ஏஹெச் மரபணுவை மனித முன்னோர்கள் எப்போது தொலைத்தார்கள் என்பது புதிராகவே உள்ளது.
இயற்கை தேர்வின் அடிப்படையில் இதனை விளக்கும் சில கருத்துகள் உள்ளன. மனித உயிரினம் தோன்றுவது வரை கடத்தப்பட்டு வந்த பரவலான நிகழ்வால் ஏற்பட்டிருக்கும் சாத்தியக்கூற்றை மறுப்பதற்கில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
சிஎம்ஏஹெச் மரபணுவை மனித உயிரினம் இழந்த நிலையில், நீண்ட தொலைவு நடக்கக்கூடிய திறன் மற்றும் குறைவான இனப்பெருக்க திறன் என இரண்டு பயனுள்ள பண்புகள் கிடைத்துள்ளன.
இதய நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையில் புதிய சிகிச்சை முறைகளை கண்டபிடிக்க முக்கிய மரபணுவை இழந்ததை இந்த ஆய்வு கண்டுபிடித்திருப்பது உதவும் என்று வார்க்கி நம்புகிறார்.