வெள்ளவத்தையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை


நேற்றிரவு வெள்ளவத்தை பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதில் மூன்று பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று இரவு வெள்ளவத்தை மயூரா பிளேஸ் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி இருந்தது. 

அதன் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உட்பட பொலிஸார் ஒன்றிணைந்து சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.