நீர் விநியோகத்தில் தடை


உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் என வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காலை 10 மணி முதல் மாலை 4.00 மணி வரையும் செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையும் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரையும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், ஏறாவூர் பிரதேசத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரையும், காத்தான்குடி பிரதேசத்தில் காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரையும், பகல் 1 மணியிலிருந்து மாலை 6 மணி வரையும், இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரையும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கல்லடி பிரதேசத்தில் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையும் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரையும், இருதயபுரம் பிரதேசத்தில் காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரையும் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரையும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.