தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவில் கல்விகற்ற மலையகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் இன்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
பூண்டுலோயா, டன்சில்வத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய ஜி. துர்கேஷ்வரன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொறியியல் பீட மூன்றாம் ஆண்டைச் சேர்ந்த இந்த மாணவன், பல்கலைக்கழகத்தில் இருந்து இன்று அதிகாலை 5.30 மணி அளவில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன், அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment
Post a Comment