சடலம் மீட்பு


(க.கிஷாந்தன்)

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனராஜா தோட்டம் ஓர்லி பிரிவு பகுதியில் அமைந்துள்ள காசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து 17.08.2019 அன்று காலை 10 மணியளவில் உடல் உருகுழைந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று அட்டன் பொலிஸாரால் மீட்டகப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மீனவர்கள் சிலர் மீன் பிடிக்க அப்பகுதிக்குச்செல்லும் வேளையில் குறித்த நீர்தேகத்திலிருந்து சடலம் ஒன்று மிதப்பதை கண்டுள்ளனர்.

இதனையடுத்து அட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர். சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் அட்டன் கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸாரும், கைரேகை பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.