நேருபுரத்தில் தலை கொய்யப்பட்ட நிலையில் சடலம் மீட்பு


திருக்கோவில் நேரு புரத்தில் நேற்று இரவு ஆடு மேய்க்கும் வயோதிப இடையர் ஒருவரது உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இவரது தலை துண்டித்துக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. இவ்வாறு கொல்லப்பட்வர் 65 வயது நிரம்பிய முனுசாமி எ்ன்று இவரது மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.

அக்கரைப்பற்று கௌரவ நீதிபதி பி.சிவககுமார்  அவர்கள் மரண விசாரணையை நடத்தினார். சம்மபவ இடத்திற்கு சட்ட மருத்துவ அதிகாரிகளும் சென்று சடலத்தைப் பார்வையிட்டனர்.