பாகிஸ்தானில் பயங்கர இடி மின்னல்




பாகிஸ்தானில் கடும் மழையின் தாக்கத்திற்குள்ளான பகுதிகளில் ஏற்பட்ட இடி, மின்னல், தாக்கத்திற்கு, பொது மக்கள் சிலர் பலியாகியுள்ளதாகத் தெரிய வருகிறது.
சிந்து மாகாணத்திலுள்ள தார்பார்க்கர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையின் காரணமாக, பயங்கர இடிமுழக்கத்துடன் கூடிய மின்னல் ஏற்பட்டது.
இதன் தாக்கத்தினால் சுமார் பத்துப் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட இருபது பேர்வரை உயிரிழந்தும், முப்பது பேர் வரை காயமடைந்தும் உள்ளதாகவும், இதன் தாக்கம் காரணமாக நூற்றுக் கணக்கான கால்நடைகளும் பலியாகியுள்ளதாக அறிய வருகிறது.