புதிய பிரதமராக மஹிந்த



இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்க நேற்று அறிவித்ததை தொடர்ந்து இன்று (21) முற்பகல் ஜனாதிபதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.