அடுத்த மாதம் இறுதியில்,உயர்தர பரீட்சை பெறுபேறுகள்


இம்முறை நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடுத்த மாதத்தில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித இது தொடர்பாக தெரிவிக்கையில், உயர் தரப்பரீட்சை பெறுபேறுகளை அடுத்த மாதம் இறுதி வாரத்தில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இம்முறை உயர்தர பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 5 தொடக்கம் 31 ஆம் திகதி வரை 2 ஆயிரத்து 628 மத்திய நிலையங்களில் இடம்பெற்றது.

இதில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது

(அரசாங்க தகவல் திணைக்களம்)