சதமடித்தார், தனஞ்சய டி சில்வா


சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது 6 வது சதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி போட்டியின் 5 ஆவது நாளான இன்று 306 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

166 பந்துகளில் 15 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 59 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் சஹீன் அப்ரிடி மற்றும் நஷிம் அபாஸ் சஹா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த போட்டி ராவல்பிண்டி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில், போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.